Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட கொண்டோமினியம் வீடு கண்டு பிடிப்பு

Share:

ஜோகூர் பாரு, பிப்.28-

ஜோகூர் பாருவில் வேலியிடப்பட்ட ஒரு கொண்டோமினியம் அடுக்கு மாடி வீடு, போதைப்பொருள் மறைத்து வைக்கப்படும் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் உள்ளூரைச் சேர்ந்த 39 வயது நபர் கைது செய்யப்பட்டார். அந்த வீடு உட்பட 4 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 25 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 15 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 51 ஆயிரத்து 777 போதைப் பித்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாக அறியப்படுகிறது என்று ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனை தெரிவித்தார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை