May 1, 2026
Thisaigal NewsYouTube
பத்து மலையைச் சுற்றிப் பார்த்தார் மொரிஸியஸ் அதிபர்
தற்போதைய செய்திகள்

பத்து மலையைச் சுற்றிப் பார்த்தார் மொரிஸியஸ் அதிபர்

Share:

மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள மொரிஸியஸ் அதிபர் பிரதிவிராஜ்சிங் ரூபன், தமது குடும்பத்தினருடன் பத்து மலை திருத்தலத்தை இன்று காலையில் சுற்றிப் பார்த்தார்.
தமது மனைவி அயுக்தா ரூபன் மற்றும் பிள்ளைகளுடன் காலை 9.30 மணியளவில் சிறப்பு வாகனத்தில் பத்து மலை திருத்தலத்தை வந்தடைந்த மொரிஸியஸ் அதிபர் பிரதிவிராஜ்சிங்கை, கோலாலம்பூர் ஶ்ரீ மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ டத்தோ நடராஜா சார்பாக அவரின் புதல்வரும் தேவஸ்தான அரங்காவலருமான டத்தோ என்.சிவக்குமார் மற்றும் தேவஸ்தான செயலாளர் சேதுபதி ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
பத்து மலை திருத்தலத்தை சுற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, அதிபர் தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேளத்தாள நாதஸ்வர இசை முழக்கத்துடன் அதிபர் தம்பதியருக்குத் தேவஸ்தான சார்பாக டத்தோ சிவக்குமாரும், சேதுபதியும் மாலை, பொன்னாடைப் போர்த்தி சிறப்புச் செய்தனர்.
பத்து மலை படிகட்டில் ஏறி மேற்குகை வரை சென்ற அதிபர் பிரதிவிராஜ்சிங் குடும்பத்தினர் மேல் தலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அத்துடன், பத்து மலை திருத்தலத்தின் வரலாற்று பெருமைகளையும் கேட்டறிந்தனர். உடன் மலேசியாவிற்கான மொரிஸியஸ் நாட்டின் தூதரக அதிகாரிகளும் காணப்பட்டனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி