மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள மொரிஸியஸ் அதிபர் பிரதிவிராஜ்சிங் ரூபன், தமது குடும்பத்தினருடன் பத்து மலை திருத்தலத்தை இன்று காலையில் சுற்றிப் பார்த்தார்.
தமது மனைவி அயுக்தா ரூபன் மற்றும் பிள்ளைகளுடன் காலை 9.30 மணியளவில் சிறப்பு வாகனத்தில் பத்து மலை திருத்தலத்தை வந்தடைந்த மொரிஸியஸ் அதிபர் பிரதிவிராஜ்சிங்கை, கோலாலம்பூர் ஶ்ரீ மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ டத்தோ நடராஜா சார்பாக அவரின் புதல்வரும் தேவஸ்தான அரங்காவலருமான டத்தோ என்.சிவக்குமார் மற்றும் தேவஸ்தான செயலாளர் சேதுபதி ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
பத்து மலை திருத்தலத்தை சுற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, அதிபர் தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேளத்தாள நாதஸ்வர இசை முழக்கத்துடன் அதிபர் தம்பதியருக்குத் தேவஸ்தான சார்பாக டத்தோ சிவக்குமாரும், சேதுபதியும் மாலை, பொன்னாடைப் போர்த்தி சிறப்புச் செய்தனர்.
பத்து மலை படிகட்டில் ஏறி மேற்குகை வரை சென்ற அதிபர் பிரதிவிராஜ்சிங் குடும்பத்தினர் மேல் தலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அத்துடன், பத்து மலை திருத்தலத்தின் வரலாற்று பெருமைகளையும் கேட்டறிந்தனர். உடன் மலேசியாவிற்கான மொரிஸியஸ் நாட்டின் தூதரக அதிகாரிகளும் காணப்பட்டனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


