Mar 5, 2026
Thisaigal NewsYouTube
மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 16% கடும் சரிவு
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 16% கடும் சரிவு

Share:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் விமான நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மலேசியாவின் ஏர்ஏசியா எக்ஸ் (AirAsia X) நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 16 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படாததால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தில் ஏர்ஏசியா எக்ஸ் பங்குகள் 27 சென் அதாவது 16.1 விழுக்காட்டிலிருந்து சரிந்து 1.41 ரிங்கிட் என்ற நிலையை எட்டின. கடந்த வார இறுதியில் மோதல் வெடித்ததில் இருந்து, வெறும் நான்கு வர்த்தக நாட்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 29 விழுக்காடு சரிந்துள்ளன.

2026 மலேசிய சுற்றுலா ஆண்டு மற்றும் ரிங்கிட் மதிப்பின் உயர்வு காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈட்டிய லாபங்கள் அனைத்தையும் இந்தச் சரிவு, விழுங்கிவிட்டது. விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுவது போன்ற காரணங்களால் ஆசிய விமான நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

Related News