சிறப்புப்பள்ளி ஒன்றில் மாற்றுத் திறனாளி மாணவி, மனோரீதியாக பாதிக்கப்படும் அளவிற்கு அந்த மாணவியை பகடிவதை செய்து வந்ததாக ஆசிரியருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து கல்வி அமைச்சு விசாரணை செய்து வருவதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் இந்த பகடிவதையில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரை கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சு தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக ஃபத்லினா சிடெக் குறிப்பிட்டார்.
சிறப்புப்பள்ளி ஒன்றில் பயின்று வந்த 14 வயது மாணவியை , ஆசிரியை ஒருவர் தொடர்ச்சியாக பகடிவதை செய்து வந்ததானால் அந்த மாணவி மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டு இருப்பது தொடர்பில் அமைச்சர் ஃபத்லினா சிடெக் இதனை தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


