துவாரான், நவ. 25-
சபா, துவாரானில் உள்ள கிராமம் ஒன்றின் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறலுக்கு ஆளான 7 வயதுடைய அந்த இரண்டு சிறுமிகள், கிராமத்து மக்களால் மீட்கப்பட்ட போது அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த சிறுமிகளின் மரணத்தில் வழக்கத்திற்கு மாறான குற்றத்தன்மை எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துவாரான் மாவட்ட போலீஸ் தலைவர் நோராய்டின் அக் மைடின் தெரிவித்தார்.








