Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்
தற்போதைய செய்திகள்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

Share:

பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளி மாணவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 15 வயது சிறுவனுக்கு எதிரான விசாரணையில், இன்று இரு சிறார் சாட்சிகள் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை நேரில் பார்க்க முடியாத வகையில் மறைப்புத் திரையின் பின்னால் இருந்து அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

சிறார் சாட்சிகளின் அடையாளமும் சாட்சிய விவரங்களும் கடந்த 2007-ஆம் ஆண்டு சிறார் சாட்சியச் சட்டத்தின் கீழ் ரகசியமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பண்டார் உத்தாமா டமன்சாரா 4 பள்ளியின் மாணவிகள் கழிப்பறையில் தனது 16 வயது வகுப்புத் தோழரை கொலை செய்ததாக 15 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதுவரை உயிரிழந்த மாணவரின் தாய், தடயவியல் நிபுணர், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏழு அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது