கங்கார்-ல் தொழிற்சாலைக்கு எதிரே உள்ள தோட்டப் பகுதியில், சாக்குப் பைக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு, மனிதருடையது என்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர் யார்? என்பது குறித்து அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதுடன், இதில் குற்றச்செயல் நடந்துள்ளதா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் யுசாரிபியூட்டின் யூசோப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி, தனது தோட்டத்தில் களைக்கொல்லி தெளித்துக் கொண்டிருந்த ஒருவர் சாக்குப் பையை கண்டுபிடித்து போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.








