Nov 2, 2025
Thisaigal NewsYouTube
இன்ஃபுளுவென்ஸா சம்பவங்கள் குறைந்துள்ளன
தற்போதைய செய்திகள்

இன்ஃபுளுவென்ஸா சம்பவங்கள் குறைந்துள்ளன

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

நாட்டில் இன்ஃபுளுவென்ஸா தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அக்டோபர் 19 முதல் 25 ஆம் தேதி வரை நாடு முழுவதும் காய்ச்சல் போன்ற தொற்றுச் சம்பவங்களும் கடுமையான சுவாச நோய்த் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் 43வது தொற்று நோயியல் வாரத்தில் இன்ஃபுளுவென்ஸா போன்ற நோய் சம்பவங்களையும் கடுமையான சுவாச தொற்றுகளையும் கண்காணித்ததில் அவை சரிவு நிலையைக் காட்டியுள்ளன.

பள்ளிகளில் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இன்ஃபுளுவென்ஸா பீடித்தவர்கள் சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்தாலும், குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட சுகாதாரப் பிரச்சனை உள்ளவர்களுக்குத் தொற்று கடுமையான நோய் அல்லது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சு எச்சரித்தது.

எனவே நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளுக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அஃது ஆலோசனை கூறியது.

Related News

கண்டிக்கப்பட்டதைத் திறந்த மனதுடன் ஏற்கிறேன்: ஊடகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தயார்!

கண்டிக்கப்பட்டதைத் திறந்த மனதுடன் ஏற்கிறேன்: ஊடகங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கத் தயார்!

தப்பிக்கும் முயற்சியில் "ஸ்பைடர்மேன்" ஆன சட்டவிரோதக் குடியேறி! அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அசாத்தியச் சாகசம்!

தப்பிக்கும் முயற்சியில் "ஸ்பைடர்மேன்" ஆன சட்டவிரோதக் குடியேறி! அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அசாத்தியச் சாகசம்!

கிளந்தானில் ஆபாச வீடியோ பதிவுகளைக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

கிளந்தானில் ஆபாச வீடியோ பதிவுகளைக் கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

வட கிழக்கு பருவ நிலையை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புப் படையும் உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

வட கிழக்கு பருவ நிலையை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்புப் படையும் உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்

திறந்தவெளி எரிப்பு நடவடிக்கையே காட்டுத் தீக்குக் காரணம்

பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது

பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது