விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 6 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில், அம்னோவுடன் கூட்டணி கொள்வது மூலம் பக்காத்தான் ஹராப்பானுக்கும், ஜசெகவிற்கும் இழப்பு காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜசெகவுடன் கூட்டுச் சேர்ந்து அம்னோ இந்தச் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மூலம், மலாய்க்காரர் வாக்காளர்களைக் கவருவது சிரமமான ஒன்றாகும் என்று அம்னோ தலைவர்களே கூறியுள்ளனர்.
இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பான், அம்னோவுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மூலம் அந்தக் கூட்டணி மலாய்க்காரர்களின் ஆதரவை பெறுவதில் தோல்வி காணலாம்.
இது கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட நெருக்கடியைப் போல், சட்டமன்ற தேர்தலிலும், மிகப் பெரிய இழப்பை பக்காத்தான் ஹராப்பான் சந்திக்கக்கூடும் என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அமாட் ஃபௌஸி அப்துல் ஹமிட் எச்சரித்துள்ளார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


