May 16, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் வைத்திருந்த முன்னாள் வனக்காவலர் கைது
தற்போதைய செய்திகள்

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் வைத்திருந்த முன்னாள் வனக்காவலர் கைது

Share:

சபா மாநிலம் துவாரன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் வனத்துறை காவலர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

61 வயதுடைய அந்நபர், நேற்று காலை சுமார் 7.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவு தளபதி ஜாகி அஷார் தெரிவித்துள்ளார்.

சோதனையின் போது சுமார் 5.9 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வனவிலங்கு உடற்பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 55 ஜோடி மான் கொம்புகள், மூன்று காண்டாமிருக கொம்புகள், 330 பாங்கோலின் செதில்கள், மலைப்பாம்புகளின் தோல்கள், ஜாகி அஷார் பறவைகளின் மண்டையோடுகள், யானையின் எலும்புகள் மற்றும் பற்கள், சம்பார் வகை மானின் கொம்புகள், கரடியின் மண்டையோடுகள் உள்ளிட்ட பல விலங்குகளின் உடற்பாகங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்கள் வைத்திருந்த ம... | Thisaigal News