Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ஆருடத்தை மறுத்தார் பினாங்கு முதலமைச்சர்
தற்போதைய செய்திகள்

ஆருடத்தை மறுத்தார் பினாங்கு முதலமைச்சர்

Share:

ஜார்ஜ்டவுன் , ஜூலை 23-

பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ பதவி மாற்றப்படவிருப்பதாக கூறப்பட்டு வரும் ஆருடத்தை பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் மறுத்துள்ளார்.

ஜக்டீப் சிங் டியோ பதவி மாற்றம் தொடர்பாக எந்தவொரு விவகாரமும் விவாதிக்கப்படவில்லை என்று முதலமைச்சர் விளக்கினார்.

மருத்துவ சிகிக்சைக்கு செல்லவிருப்பதாக கூறி கடந்த ஜுலை 19 ஆம் தேதி, குறுகிய கால விடுமுறைக்கான விண்ணப்பத்தை மட்டுமே ஜக்டீப் சிங் சமர்ப்பித்துள்ளார். மற்றப்படி எந்தவொரு விவாகரமும் அவருடன் பேசப்படவில்லை என்று சோவ் கோன் யோவ் தெளிவுபடுத்தினார்.

தற்போது கணுக்கால் வலியினால் அவதியுற்று வரும் ஜக்டீப் சிங், தனிப்பட்ட விவகாரத்திற்காக குறுகிய கால விடுறையில் செல்வதாக நேற்று அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு