வேப் சிகரெட் பயன்பாட்டினால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க ஆண்டுதோறும் தோராயமாக RM369 மில்லியன் செலவிடப்படுவதைத் தவிர்க்க, அதன் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும்படி அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கமான சிஏபி வலியுறுத்தியுள்ளது.
இந்தச் செலவுத் தொகை வேப் சிகரெட் மீதான உற்பத்தி வரி வருவாயை விட மிக அதிகம் என்றும், வேப் சிகரெட்டை முழுமையாகத் தடை செய்வதன் மூலம் நோய்களைத் தடுக்கலாம் என்றும் சிஏபி-இன் மூத்த கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார். மேலும், சிகிச்சைக்கான செலவை புகைபிடிக்காதவர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோரே தாங்க வேண்டியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு உடனடியாக Vape சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








