Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மோசடிக்கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

மோசடிக்கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 1 -

சட்டவிரோத குடியேறிகளுக்கு அகதிகளுக்கான ஐ.நா. தூதகரத்தின் போலி அடையாள அட்டையை பெற்று தந்து, ஆயிரக்கணக்கான வெள்ளி லாபத்தை ஈட்டி வந்த மோசடிக் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.

இந்த மோசடிக்கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்த ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த நபரும் பிடிபட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்துக் மொகமட் யூசூப் ஜான் மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல், சக நாட்டவர்களுக்கு அகதிகளுக்கான போலி அடையாள ஆவணத்தை தயாரித்து கொடுத்ததுடன் இதர சேவைகளையும் வழங்கி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி செபெராங் பெராய் தெங்கா, செபெரங் பெராய் உதாரா,பெர்லிஸ் ஆராவ் உட்பட 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 18 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்துக் மொகமட் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது