Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மோசடிக்கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

மோசடிக்கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு

Share:

ஜோர்ஜ் டவுன், மார்ச் 1 -

சட்டவிரோத குடியேறிகளுக்கு அகதிகளுக்கான ஐ.நா. தூதகரத்தின் போலி அடையாள அட்டையை பெற்று தந்து, ஆயிரக்கணக்கான வெள்ளி லாபத்தை ஈட்டி வந்த மோசடிக் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.

இந்த மோசடிக்கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்த ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த நபரும் பிடிபட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்துக் மொகமட் யூசூப் ஜான் மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்த கும்பல், சக நாட்டவர்களுக்கு அகதிகளுக்கான போலி அடையாள ஆவணத்தை தயாரித்து கொடுத்ததுடன் இதர சேவைகளையும் வழங்கி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி செபெராங் பெராய் தெங்கா, செபெரங் பெராய் உதாரா,பெர்லிஸ் ஆராவ் உட்பட 16 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 18 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்துக் மொகமட் யூசுப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு