Sep 9, 2026
Thisaigal NewsYouTube
விமானத்தில் போதைப் பொருள் கடத்திய வழக்கு: மேலும் ஒரு மலேசிய விமானி கைது
தற்போதைய செய்திகள்

விமானத்தில் போதைப் பொருள் கடத்திய வழக்கு: மேலும் ஒரு மலேசிய விமானி கைது

Share:

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானிக்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்த தொடர் விசாரணையில், மேலும் ஒரு மலேசிய விமானியை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 வயதுகளில் உள்ள அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் இந்த வழக்கில் மலேசியாவில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தற்போது கைது செய்யப்பட்ட இரண்டாவது விமானி, முதல் விமானி பணியாற்றிய விமான நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றும், கடத்தல் கும்பலுக்கும் முதல் விமானிக்கும் இடையிலான பணப் பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஜகார்த்தா, Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையத்தில், 25 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

சிலாங்கூர் இந்திய சமூகத்தினருக்கு அரசுப் பணிக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

சிலாங்கூர் இந்திய சமூகத்தினருக்கு அரசுப் பணிக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

புத்ராஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 325 வெளிநாட்டவர்கள் கைது

புத்ராஜெயா அடுக்குமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 325 வெளிநாட்டவர்கள் கைது

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி - அன்வார் உறுதி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க உதவி - அன்வார் உறுதி

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை தொடரும் - அமைச்சர் சுல்கிஃப்ளி தகவல்

சரவாக்கில் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை தொடரும் - அமைச்சர் சுல்கிஃப்ளி தகவல்

ஓப்ஸ் மாஹிர் அதிரடி: கோலா மூடாவில் இரு தொழிற்சாலைகளில் 39 வெளிநாட்டவர்கள் கைது

ஓப்ஸ் மாஹிர் அதிரடி: கோலா மூடாவில் இரு தொழிற்சாலைகளில் 39 வெளிநாட்டவர்கள் கைது

தபுங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீதான அதிகார துஷ்பிரயோக வழக்கு: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

தபுங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அஸீஸ் மீதான அதிகார துஷ்பிரயோக வழக்கு: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

விமானத்தில் போதைப் பொருள் கடத்திய வழக்கு: மேலும் ஒரு மலேச... | Thisaigal News