சிலாங்கூர் மாநில இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் வேலை தேடுவோர் மலேசிய அரசாங்கப் பணிகளில் உள்ள வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இமயம் (IMAIYAM) எனப்படும் புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்கள் சங்கம், பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகம் மற்றும் ஶ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்ச்சியானது, வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, டேவான் செர்பாகுனா எம்பிஎஸ்ஜே, ஜாலான் பெசார், ஶ்ரீ கெம்பாங்கானில் நடைபெறவுள்ளது.
இதில் அரசாங்கப் பணிகளுக்கான தகுதிகள், விண்ணப்ப நடைமுறைகள், தேர்வு செயல்முறை மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும், பல்வேறு அரசாங்கத் துறைகளின் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அரங்குகளும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம்.








