Mar 15, 2026
Thisaigal NewsYouTube
காற்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி வெற்றி
தற்போதைய செய்திகள்

காற்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி வெற்றி

Share:

ஜோர்ஜ் டவுன், ஜன - 4,

பினாங்கு, கோப்பா அரேனாவில் தேசிய அளவிலான MIFA காற்பந்து போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 24 ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடந்தேறியது.

12 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் டெங்கில் தமிழ்ப்பள்ளி பங்கேற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டி சென்று மகத்தான சாதனையைப் படைத்துள்ளது.

மாநில மற்றும் தேசிய அளவிலான காற்பந்து போட்டியில் டெங்கில் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளது.

பல சோதனைகள், சவால்கள், எதிர்ப்புகள் கடந்து மாணவர்கள் தேசிய அளவிலான காற்பந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கிய பயிற்சிகளும் மகத்தான வெற்றிக்கு ஒன்றாகும்.

வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படும் பள்ளியின் இணைப்பாட பிரிவு துணைத்தலைமையாசிரியர் சுரேஷ் இராமச்சந்திரனின் சீரிய திட்டமிடல், அயராத உழைப்பு, களம் இறங்கி பயிற்றுவித்த விதம் இவ்வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து