May 22, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு தங்கும் விடுதியின் அறைகள் தீயில் நாசமாகின
தற்போதைய செய்திகள்

இரண்டு தங்கும் விடுதியின் அறைகள் தீயில் நாசமாகின

Share:

குவாலா நெராங், ஜூன் 19-

குவாலா நெராங் இடைநிலைப்பள்ளியின் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள இரண்டு அறைகள் தீயில் எரிந்து நாசமாகின.

இச்சம்பவம் குறித்து இன்று காலை 7.37 மணியளவில் தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதாக குவாலா நெராங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் அமினுதீன் கோசாலி தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பொருட்களை சேகரித்து வைக்கும் அறை உட்பட A வகுப்பை சேர்ந்த குளியலறையும் தீயில் பாதிக்கப்பட்டிருந்ததாக அமினுதீன் கோசாலி கூறினார்.

அவ்விரு அறைகளும் 90 விழுக்காடு தீயில் கறுகி சேதமுற்ற நிலையில் தீ ஏற்பட்ட சம்பவ குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமினுதீன் கோசாலி மேலும் தகவலளித்தார்.

Related News