வீ மெங் சீ என்ற இயற்பெயரைக் கொண்ட சர்ச்சைக்குரிய ராப் பாடகர் நேமிவீ மீது தொடரப்பட்டிருந்த இரண்டு போதைப்பொருள் வழக்குகளில் இருந்து கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று அவரை விடுதலை செய்தது.
அவரது மீது சுமத்தப்பட்டிருந்த அக்குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி, கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் மனுவை, அட்டர்னி ஜெனரல் அலுவலகம் நிராகரித்தது.
இந்த வழக்குகள் 1952-ஆம் ஆண்டு நச்சுப் பொருட்கள் சட்டப் பிரிவு 9(1) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டப் பிரிவு 39A(1) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேமிவீ தாக்கல் செய்த இரண்டாவது மனுவை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி இன்று அவரை அக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி, ஜாலான் கான்லே பகுதியில் உள்ள தங்கும்விடுதியின் அறையில், 1.57 கிராம் methamphetamine வைத்திருந்ததாக, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.








