May 25, 2026
Thisaigal NewsYouTube
மாது ஒருவர் 6 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
தற்போதைய செய்திகள்

மாது ஒருவர் 6 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 09-

மனபாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர் தாம் தங்கியிருந்த PPR அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் குவாந்தன் அருகில் தஞ்சோங் லம்பூர், பாக் மஹத், பிபிஆர் பொது குடியிருப்புப்பகுதியில் நிகழ்ந்தது.

தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

27 வயதுடைய அந்த மாது மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆறாவது மாடியிலிருந்து கீழே குதிப்பதற்கு முன்னதாக அவர் அந்த ஆறாவது மாடியில் அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக ஏசிபி வான் முகமட் குறிப்பிட்டார்.

அந்த மாது, மனநலப்பாதிப்பு தொடர்பாக குவந்தான் தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வந்துள்ளார் என்று மருத்துவக் குறிப்பு காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி