Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மாது ஒருவர் 6 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை
தற்போதைய செய்திகள்

மாது ஒருவர் 6 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 09-

மனபாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மாது ஒருவர் தாம் தங்கியிருந்த PPR அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் குவாந்தன் அருகில் தஞ்சோங் லம்பூர், பாக் மஹத், பிபிஆர் பொது குடியிருப்புப்பகுதியில் நிகழ்ந்தது.

தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த மாது, சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

27 வயதுடைய அந்த மாது மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆறாவது மாடியிலிருந்து கீழே குதிப்பதற்கு முன்னதாக அவர் அந்த ஆறாவது மாடியில் அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக ஏசிபி வான் முகமட் குறிப்பிட்டார்.

அந்த மாது, மனநலப்பாதிப்பு தொடர்பாக குவந்தான் தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வந்துள்ளார் என்று மருத்துவக் குறிப்பு காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு