Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா குறித்து மடானியின் தொலைநோக்குப் பார்வை? டத்தோ ஶ்ரீ ரமணன் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

மலேசியா குறித்து மடானியின் தொலைநோக்குப் பார்வை? டத்தோ ஶ்ரீ ரமணன் கூறுகிறார்

Share:

ஷா ஆலாம், செப்டம்பர்.20-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கிய மடானி மலேசியா தொலைநோக்குப் பார்வையானது அரசியல் எதிர்கட்சிகள், அனைத்து இனங்கள் மீதும் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் மீது கவனம் செலுத்தும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள தொடங்கியிருப்பது ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் தற்போது இந்தியர்களிடம் நட்புறவாக உள்ளது என்று குறிப்பிட்ட டத்தோ ஶ்ரீ ரமணன், மடானி அரசாங்கம் எந்த இனத்தையோ அல்லது தரப்பினரையோ ஓரங்கட்டாமல், புறக்கணிக்காமல் இருக்கக்கூடிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதே இதற்கானக் காரணம் என்றார்.

"முன்பு இந்தியச் சமூகத்தை பாஸ் கட்சி அணுகாது. ஆனால் தற்போது, அக்கட்சி தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு இந்திய சமூகத்துடன் நட்புக் கொள்ள விரும்புகிறது. இதற்கு அடிப்படை வேராக இருந்து தழைக்கச் செய்தது மடானி அரசாங்கமாகும் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சரான டத்தோ ஶ்ரீ ரமணன் பெருமிதம் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து