Aug 9, 2026
Thisaigal NewsYouTube
விபத்தினால் தெலுக் இந்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் - 13 நேபாளியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

விபத்தினால் தெலுக் இந்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் - 13 நேபாளியர்கள் கைது

Share:

தெலுக் இந்தான், மார்ச்.15-

தெலுக் இந்தான், பத்து 8, ஜாலான் சங்காட் ஜொங் என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்த ஒரு விபத்தினால் கலவரம் வெடித்தது. இதில் 13 நேபாளியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

பிரதான சாலையில் நடந்து சென்ற நேபாளிய பிரஜை ஒருவர், வாகனத்தினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமுற்றார். இதனால் அப்பகுதியில் கலவரம் வெடித்ததாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பக்ரி சைனால் அபிடின் தெரிவித்தார்.

நேபாளிய ஆடவரை மோதித் தள்ளிய வாகனம், நிற்காமல் சென்று விட்டதால் ஆத்திரமுற்ற நேபாளியப் பிரஜைகள் சுமார் ஆயிரம் பேர் திரண்டனர். தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு, வாகனங்கள் செல்ல வழிவிடாமல் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அவர்களின் சாலை மறியல் போராட்டம், சுமார் ஐந்து மணி நேரம் வரை நீடித்தது.

இன்று அதிகாலை 2 மணி வரை நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தைத் தடுக்க போலீசார் களம் இறக்கப்பட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதிகாலை 2 மணிக்கு மேல் அந்த நோபாளியப் பிரஜைகள் அனைவரும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் என்று ஏசிபி பக்ரி குறிப்பிட்டார்.

இந்த கலவரத்தைத் தூண்டிவிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் என நம்பப்படும் 13 நேபாளிய ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து குற்றவியல் சட்டம் 147 ஆவது பிரிவின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து