புத்ராஜெயா, பிப்ரவரி.06-
மலேசிய உயர்நீதிமன்றத்தின் புதிய நீதித்துறை ஆணையர்களாக வழக்கறிஞர் கே. ராஜா சேகரன் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் ஜம்ரி பாக்கார் உட்பட 11 பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
புத்ராஜெயாவிலுள்ள நீதி அரண்மனையில் நடைபெற்ற நியமன சடங்கில், அவர்கள் மலேசிய தலைமை நீதிபதி வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலேவிடமிருந்து தங்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.








