கெப்பாலா பாத்தாஸ், மே 11-
வாகனம் ஒன்று, சாலையைவிட்டு விலகி, ஆற்றில் விழுந்ததில் மாது ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் பினாங்கு,கெப்பாலா பாத்தாஸ், ஜாலான் லஹார் கெப்பார் பெனாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
40 வயது சித்தி ஹாவா முகமது இசா என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது என்று தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
ஆற்றிலிருந்து பெரோடுவா அல்சா ரக கார் மீட்கப்பட்ட போது, அந்த காரில் சம்பந்தப்பட்ட மாதுவின் உடல் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார். போலீசாரின் புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மாதுவின் உடல், காவல்துறையிரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் விவரித்தார்.








