Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

இரண்டு நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 13-

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், கெலனா ஜெய- வில் ஒரு சமயப்பள்ளி அருகில் உள்ள Surau- கழிப்பறையில் பெண் தலைமையாசிரியரையும், பணிப்பெண் ஒருவரையும் ராம்போ கத்தியால் குத்தி, காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

46 மற்றும் 50 வயதுடைய அந்த இரண்டு நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு பின்னணி காரணம் என்ன என்பது குறித்து தாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கத்துக்குத்துக் காயங்களுக்கு ஆளான இரண்டு பெண்களில் 26 வயதுடைய பெண், ஷா ஆலாம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

இரண்டு நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் | Thisaigal News