May 22, 2026
Thisaigal NewsYouTube
காதலியை தள்ளிவிட்டு நீதிமன்றத்தில் கதறிய நபர்
தற்போதைய செய்திகள்

காதலியை தள்ளிவிட்டு நீதிமன்றத்தில் கதறிய நபர்

Share:

சிலாங்கூர், பிப்ரவரி 29 -

சிலாங்கூர், செதிய அலாம் மில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 23 ஆவது மாடியிலிருந்து தன் காதலியை தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகிக்கும் ஆடவர் இன்று நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோது தான் செய்த தவற்றை எண்ணி கதறி அழுந்தார்.

லாரி ஓட்டுநரான 37 வயதுடைய அந்நபரின் தரப்பிலிருந்து ரிமாண்டில் வைப்பதற்கு உத்தரவு விண்ணப்பிக்கப்பட்டதை தொடந்து அவர் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை அந்த ஆடவர் தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மொகமட் இக்பால் கூறினார்.

32 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவரும் முன்னதாக தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக மொகமட் இக்பால் மேலும் விவரித்தார்.

Related News