Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போ​லீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக போ​லீசில் புகார்

Share:

அரசாங்க ஏஜென்சி ஒன்றுக்கு தலைமையேற்றுள்ள முக்கிய அதிகாரி ஒருவர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக 30 வயது மாது ஒருவர் போ​லீசில் புகார் தெரிவித்துள்ளார. கடந்த வாரம் அளிக்கப்பட்ட இந்த போ​லீஸ் ​புகாரைத் தொடர்ந்து புக்கிட் அமான் போ​​லீஸ் தலைமையகம், விசாரணை அறிக்கை ஒன்றை திறந்துள்ளது.

உயர் பதவி வகிக்கும் அந்த அரசு அதிகாரி, கடந்த ஆண்டிலிருந்து வாட்சப் மூலமாக தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக நிதித்துறையில் ஆலோசகராக பணியாற்றி வரும் அந்த மாது தனது போ​லீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாது அளித்துள்ள புகாரை சிப்பாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் வான் கமாருல் வான் அர்சான் உறுதிபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகம் நேரடியாக தனது கட்டுப்பாட்டின் ​கீ​ழ் புலன் விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாது அளித்துள்ள போ​லீஸ் புகார், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News