தவௌ, ஜூன் 21-
நீதிமன்ற வழக்கை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கு 50 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஒருவருக்கு தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
அத்துடன் 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
கமாலியா யாஹ்டி என்ற அந்த துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான தண்டனையின் அமலாக்கத்தை நீதிமன்றம் ஒத்திவைத்தது.








