Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இறக்குமதி செய்யப்பட்ட டயர்களில் போலி லேபல்கள் மற்றும் பார்கோட் அழிப்பு மோசடி – எஸ்பிஆர்எம் விசாரணையில் அம்பலம்!
தற்போதைய செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட டயர்களில் போலி லேபல்கள் மற்றும் பார்கோட் அழிப்பு மோசடி – எஸ்பிஆர்எம் விசாரணையில் அம்பலம்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

மலேசியாவில் டயர் இறக்குமதியில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய மோசடியை விசாரணை செய்து வரும் எஸ்பிஆர்எம், இறக்குமதி செய்யப்பட்ட டயர்களில் போலி லேபிள்கள் மற்றும் பார்கோட்கள் அழிக்கப்பட்ட மோசடிகளைக் கண்டறிந்துள்ளது.

OPS GRIP என்ற பெயரில் நடைபெற்று வரும் இவ்விசாரணையில், அங்கீகரிக்கப்படாத விநியோகஸ்தர்கள் மூலம் டயர்கள் விற்பனை செய்யப்பட்டதும், இறக்குமதி செய்யப்பட்ட டயர்கள் கடத்தப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆறு கிடங்குகள் மற்றும் கொள்கலன்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, மொத்தம் 17,672 டயர்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, Toyo Tires, Yokohama, Bridgestone போன்ற முன்னணி டயர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட டயர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த மோசடிகள் குறித்து மேல் விசாரணைகள் நடைபெற்று வருவதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி