Apr 13, 2026
Thisaigal NewsYouTube
"வழக்கறிஞர் நிறுவனத்திற்குள் சிக்கிய இருவர் பாதிப்பு!"
தற்போதைய செய்திகள்

"வழக்கறிஞர் நிறுவனத்திற்குள் சிக்கிய இருவர் பாதிப்பு!"

Share:

பினாங்கின் பாரம்பரியப் பகுதியில் உள்ள ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடத்திற்குள் இருவர் சிக்கினர். .

லெபு கிங் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி கடைவீட்டை கொண்ட அந்த சட்ட அலுவலகத்த்தில் மதியம் 12.14 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பழமையான கட்டிடத்தில் இருவர் சிக்கியிருந்ததை பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியது. மரத்தினால் ஆன உட்புறக் கட்டமைப்பைக் கொண்ட அந்தக் கட்டிடத்தில் தீ மிக வேகமாகப் பரவியது.

கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த இருவரில் ஒருவர் மதியம் 1.05 மணி அளவில் மீட்கப்பட்டார் என்று தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

அந்த பழமையான கடைவீடு, சுமார் 70% சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் பேரரசியை அவமதித்ததாக  வழக்கு: தற்காப்பு வாதம் புரிய இறைச்சிக் கடைக்காரருக்கு உத்தரவு

முன்னாள் பேரரசியை அவமதித்ததாக வழக்கு: தற்காப்பு வாதம் புரிய இறைச்சிக் கடைக்காரருக்கு உத்தரவு

 KLIA-வில் 4.2 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பறிமுதல்: நான்கு பேர் கைது

KLIA-வில் 4.2 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பறிமுதல்: நான்கு பேர் கைது

சுங்கை பூலோ சிறைக்கைதி தப்பியது அலட்சியமா? - போலீஸ் தீவிர விசாரணை

சுங்கை பூலோ சிறைக்கைதி தப்பியது அலட்சியமா? - போலீஸ் தீவிர விசாரணை

16,000 ரிங்கிட் விற்பனை வரி நிலுவை: நிறுவன இயக்குநர்கள் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு

16,000 ரிங்கிட் விற்பனை வரி நிலுவை: நிறுவன இயக்குநர்கள் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டு

சாலைப் பாதுகாப்பு: வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது, பொறுப்புணர்வு அவசியம் - அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்தல்

சாலைப் பாதுகாப்பு: வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது, பொறுப்புணர்வு அவசியம் - அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்தல்

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மரண தண்டனை தேவையில்லை: அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்து

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மரண தண்டனை தேவையில்லை: அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்து