47 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ், 3 மாநில அமைச்சர்கள் உட்பட 10 பேர் விமான விபத்தில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, கீழறுப்பு செயலே காரணமாகும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று அந்த விமான விபத்து குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபல் சிக்ஸ் என்ற அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் மோசமான செயல் திறனே காரணமாகும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அந்த விமானி பின்பற்றவில்லை என்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1976 ஆம் ஆண்டு, ஜூன் 6 ஆம் தேதி, பிற்பகல் 3.09 மணியளவில் லபுவானிலிருந்து கோத்தா கினாபாலுவை நோக்கி அந்த விமானம் சென்றுக்கொண்டிருந்த போது செம்புலான் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில், முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ் உட்பட 10 பேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.
சபாவில் முதலமைச்சராக ஃபுவாட் ஸ்டிபென்ஸ் பதவி ஏற்ற 53 ஆவது நாளில் நிகழ்ந்த இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டதால், அப்போது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


