47 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ், 3 மாநில அமைச்சர்கள் உட்பட 10 பேர் விமான விபத்தில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, கீழறுப்பு செயலே காரணமாகும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று அந்த விமான விபத்து குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபல் சிக்ஸ் என்ற அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் மோசமான செயல் திறனே காரணமாகும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அந்த விமானி பின்பற்றவில்லை என்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1976 ஆம் ஆண்டு, ஜூன் 6 ஆம் தேதி, பிற்பகல் 3.09 மணியளவில் லபுவானிலிருந்து கோத்தா கினாபாலுவை நோக்கி அந்த விமானம் சென்றுக்கொண்டிருந்த போது செம்புலான் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில், முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ் உட்பட 10 பேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.
சபாவில் முதலமைச்சராக ஃபுவாட் ஸ்டிபென்ஸ் பதவி ஏற்ற 53 ஆவது நாளில் நிகழ்ந்த இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டதால், அப்போது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


