May 1, 2026
Thisaigal NewsYouTube
விமானியின் மோசமான செயல்பாடே காரணம்
தற்போதைய செய்திகள்

விமானியின் மோசமான செயல்பாடே காரணம்

Share:

47 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ், 3 மாநில அமைச்சர்கள் உட்பட 10 பேர் விமான விபத்தில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, கீழறுப்பு செயலே காரணமாகும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று அந்த விமான விபத்து குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபல் சிக்ஸ் என்ற அந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் மோசமான செயல் திறனே காரணமாகும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை அந்த விமானி பின்பற்றவில்லை என்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1976 ஆம் ஆண்டு, ஜூன் 6 ஆம் தேதி, பிற்பகல் 3.09 மணியளவில் லபுவானிலிருந்து கோத்தா கினாபாலுவை நோக்கி அந்த விமானம் சென்றுக்கொண்டிருந்த போது செம்புலான் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில், முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டிபென்ஸ் உட்பட 10 பேர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.
சபாவில் முதலமைச்சராக ஃபுவாட் ஸ்டிபென்ஸ் பதவி ஏற்ற 53 ஆவது நாளில் நிகழ்ந்த இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை ரகசிய காப்புச்சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டதால், அப்போது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி