Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் சாலையில் கோர விபத்து: சிறுமி உட்பட நால்வர் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் சாலையில் கோர விபத்து: சிறுமி உட்பட நால்வர் பலி

Share:

குளுவாங், ஜூன்.01-

ஜோகூர் பாரு - ஆயர் ஈத்தாம் சாலையில், சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலைக்கு எதிரே இன்று மதியம் ஏற்பட்ட 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் 10 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 1.16 மணியளவில் டோயோட்டா வியோஸ், பெரோடுவா அல்சா, புரோட்டான் வீரா, மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய ஐந்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து நேர்ந்ததாக ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் தெரிவித்துள்ளது.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, டோயோட்டா வியோஸ் காரில் சிக்கியிருந்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது. பலியானவர்கள் 36 வயது Aiman Rashid, 10 வயது சிறுமி Nur Airish Syifa Sidek, 33 வயது Nor Azlina Abd Latif மற்றும் 73 வயது Semek Mat Soh என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்