Dec 17, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.17-

மலேசியாவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்குச் செல்லும் விமானத்தில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளைக் கடத்த முயன்ற, மலேசிய பெண் ஒருவர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பயணப் பெட்டியில் இரண்டு கிப்போன் வகைக் குரங்குகளை அடைத்து வைத்திருந்த அவர், மும்பைக்குக் கடத்த முயன்றதாக நம்பப்படுகின்றது.

முன்னதாக அந்த இரண்டு குரங்குகளும் இந்தோனேசியாவில் இருந்து, மலேசியாவிற்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில், கேஎல்ஐஏ முனையம் 1-இல் 38 வயதான அப்பெண் கைது செய்யப்பட்டதாக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

Related News

டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்

டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

7 மாநிலங்களில் கனமழை தொடரும் - மெட்மலேசியா எச்சரிக்கை

7 மாநிலங்களில் கனமழை தொடரும் - மெட்மலேசியா எச்சரிக்கை

டுரியான் துங்காலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: தொடக்கத்திலேயே கொலை வழக்காக  விசாரணை செய்யாதது ஏன்? - துணையமைச்சர் எம். குலசேகரன் கேள்வி

டுரியான் துங்காலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: தொடக்கத்திலேயே கொலை வழக்காக விசாரணை செய்யாதது ஏன்? - துணையமைச்சர் எம். குலசேகரன் கேள்வி

பாலிங்கில் கத்திக் குத்துத் தாக்குதலில் பெண் பலி: மூதாட்டி படுகாயம்

பாலிங்கில் கத்திக் குத்துத் தாக்குதலில் பெண் பலி: மூதாட்டி படுகாயம்