Mar 14, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம்: ஆகஸ்ட் மாதம் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

நாட்டில் நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம்: ஆகஸ்ட் மாதம் அறிமுகம்

Share:

புத்ராஜெயா, ஜனவரி.07-

அரசாங்கம், நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தவிருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் இன்று அறிவித்துள்ளார்.

தொழிலாளர்கள், குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்கள் அல்லது உடல் ஊனமுற்றவர்கள், தொழில் நீதிமன்றங்களுக்கு நேரடியாகச் செல்வதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதே நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தின் முக்கிய நோக்கமாகும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

தொழிலாளர் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளைத் தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே கையாள்வதன் மூலம் நீதியை விரைவாக உறுதிச் செய்ய இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சின் 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாக நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம் பார்க்கப்படுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது காட்டுகிறது என டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, முன்னாள் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களால் இதற்கான ஆலோசனைகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது, இதன் செயலாக்கம் வரும் ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரவிருப்பதாக அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்