கோலாலம்பூர், ஜூலை 9-
மனித வள அமைச்சின் மனித வள மேம்பாட்டுக்கழகமான HDR Corp. நிறுவனத்தின் மீது பொது கணக்குக்குழுவும், தேசிய கணக்காய்வுத்துறையும் நடத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் தனது விசாரணையை தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, இன்று செய்வாய்க்கிழமை காலையில் HRD Corp அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளது.
காலை 1.30 மணியளவில் HDR Corp. அலுவலகத்திற்குள் SPRM அதிகாரிகள் சிலர் நுழைந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய கணக்காய்வுத்துறை கண்டு பிடித்த சில முறைகேடுகள் தொடர்பில் முக்கிய பத்திரங்களை கைப்பற்றுவதற்காக SPRM அதிகாரிகள் அந்த மனித வளமேமோபட்டுக்கழகத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
நாடு முழுவதும் 21 ஆயிரத்து 58 முதலாளிகளிடம் HRD Corp வசூல் செய்த 20 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி லெவிப்பணம் தொடர்பில் தனக்கு இருக்கின்ற கடப்பாட்டை நிறைவேற்றாமல் அந்த லேவிப்பணத்தை HRD Corp முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.








