Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாருக்கு எதிராக எந்தவொரு தீர்மானமும் சமர்ப்பிக்கப்படவில்லை: சபாநாயகர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாருக்கு எதிராக எந்தவொரு தீர்மானமும் சமர்ப்பிக்கப்படவில்லை: சபாநாயகர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-

பிரதமரும், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை நாடாளுமன்ற உரிமைக் குழு முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்க்கட்சியினர் சமர்ப்பிக்கவில்லை என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.

அப்படியொரு தீர்மானத்தை இதுவரையில் தாம் பெறவில்லை என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார்.

பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாங்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய சபாநாயகரின் முடிவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது தொடர்பில் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இதனைத் தெரிவித்துள்ளர்.

சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மானிய சீரமைப்புத் திட்டத்திலிருந்து பயன் அடைந்து வரும் வெளிநாட்டினருக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகளைத் தற்காத்து வருவதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று பிரதமர் அன்வார் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கும் கருத்தைத் தொடர்ந்து அவர், நாடாளுமன்ற உரிமைக் குழு முன்னிலையில் நிறுத்துவதற்குத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முகைதீன் தெரிவித்து இருந்தார்.

எனினும் தன்னிடம் எந்தவொரு தீர்மானமும் சர்ப்பிக்கப்பட்டு இருக்குமானால், இறைவன் அருளில் அதனை மதிப்பாய்வு செய்து, நிலைக்குழுவினரிடம் கோடிட்டுக் காட்டி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

ஆனால், அப்படியொரு தீர்மானம் எதனையும் இன்னும் பெறவில்லை என்று அவர் விளக்கினார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்