Apr 17, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியின் தீர்வையற்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை - பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

லங்காவியின் தீர்வையற்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை - பிரதமர் அன்வார்

Share:

லங்காவியின் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அந்தத் தீவின் முழுமையாக தீர்வையற்ற அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சைபர்ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் , லங்காவியில் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, இது குறித்து இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான் விரிவாக ஆராய்ந்து வருவதாக அன்வார் கூறினார்.

முன்னதாக, லங்காவியில் வாகனங்கள் மற்றும் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வையற்ற தளர்வுகள் நீக்கப்பட்டதால், அதன் ஈர்ப்புத் தன்மை குறைந்துள்ளதாக கெடா சுல்தான் சலேஹுடின் சுல்தான் பத்லிஷா கவலை தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் புகையிலை பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டதும், 3 லட்சம் ரிங்கிட்டிற்கு மேலான வாகனங்களுக்கு வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related News