Dec 4, 2025
Thisaigal NewsYouTube
குழந்தை பராமாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குழந்தை பராமாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

Share:

மூன்று வயது சிறுமி, நீரில் மூழ்கி மரணம் அடையும் அளவிற்கு அலட்சியமாக இருந்ததாக குழந்தை பராமாரிப்பாளர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

சித்தி ஐனா நுர்னிசா முஹமாட் என்ற வயதுடைய அந்தப் பெண் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காலை 11.20 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு, லொஜிங் ஹைட்டில் ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News