Aug 12, 2026
Thisaigal NewsYouTube
உயிரிழந்த வீரரின் பிள்ளைகள் எஸ்எஸ்பிஎன் மூலம் நன்மையடைகின்றனர்
தற்போதைய செய்திகள்

உயிரிழந்த வீரரின் பிள்ளைகள் எஸ்எஸ்பிஎன் மூலம் நன்மையடைகின்றனர்

Share:

தெலுக் இந்தான், மே.18-

அண்மையில் நிகழ்ந்த தெலுக் இந்தான் விபத்தில் உயிரிழந்த மத்திய கலகத் தடுப்புப் படை வீரர் சார்ஜன் முகமட் ரோஸ்லான் அப்துல் ரஹிமின் மூன்று பிள்ளைகள் தேசியக் கல்விச் சேமிப்புத் திட்டமான எஸ்எஸ்பிஎன் மூலம் 1 இலட்சத்து 93 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பலன்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர். பிடிபிடிஎன் தலைவர் டத்தோ ஶ்ரீ நொர்லிஸா அப்துல் ரஹிம் கூறுகையில், 46 வயதான அந்த எப்ஃஆர்யூ வீரரின் சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிரைம், சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிளஸ் ஆகிய இரண்டு திட்டங்களில் செய்த சேமிப்பின் விளைவாக இந்த பலன்கள் கிடைத்தன என்றார்.

முகமட் ரோஸ்லான் கடந்த மே 7ஆம் தேதி தனக்காக சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிரைம் கணக்கைத் திறந்திருந்தார். இதன் மூலம் அவர் ஆயிரம் ரிங்கிட் தக்காபுஃல் பாதுகாப்பையும் மூவாயிரம் ரிங்கிட் மரண உதவித் தொகையையும் பெறத் தகுதிப் பெற்றார். மேலும், அவர் தனது மூன்று குழந்தைகளுக்காக 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இந்தான் தொகுப்பின் கீழ் மூன்று சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிளஸ் கணக்குகளைத் திறந்திருந்தார். ஒவ்வொரு கணக்கிற்கும் மாதம் 30 ரிங்கிட் செலுத்தியதன் மூலம் ஒவ்வொரு பிள்ளைக்கும் 60 ஆயிரம் ரிங்கிட் வீதம், மொத்தம் 1 இலட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் விபத்து மரண தக்காபுஃல் பாதுகாப்பையும் மூன்று கணக்குகளுக்கும் சேர்த்து 9 ஆயிரம் ரிங்கிட் மரண உதவித் தொகையையும் பெறத் தகுதி பெற்றதாக நொர்லிஸா குறிப்பிட்டார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது