கோலாலம்பூர்,ஜன.16
அரசாங்க பல்கலைக்கழகமான Universiti Islam Antarabangsa Malaysia (UIAM) - மிற்கு செல்லும் பிரதான பாதையை சுற்றி குப்பைகள் சேகரிப்பு சேவைகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து செலாயாங் நகராட்சி மன்றம் (MPS) அறிவித்துள்ளது.
Simpang tiga Masjid Al-Sharif - ரிலிருந்து UIAM- மிற்கு செல்லும் வழியை சுற்றி அதிகளவில் குப்பைகள் சேகரித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக MPS துணைத்தலைவர் அடி ஃபைசால் அஹமாட் தர்மிசி தெரிவித்தார்.
குப்பைகள் குவித்து வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அப்பகுதி மக்கள் அளித்த புகாரை தொடர்ந்து MPS, குப்பைகள் சேகரிப்பு சேவையின் தரத்தை அதிகரிக்கவுள்ளதாக Adi Faizal கூறினார்.
குப்பைகளை சேகரிக்கும் லாரிகளை அதிகரிப்பது, குப்பை தொட்டிகளை மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகள் வருகின்ற மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அடி ஃபைசால் ஓர் அறிக்கையில் விளக்கினார்.








