எல்மினா விமான விபத்து தொடர்பாக சம்பவ இடத்தில் தேடல் நடவடிக்கை 95 விழுக்காடு முடிவடைந்து விட்டதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசைன்தெரிவித்துள்ளார். அந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் சிதறிய மனித உடல் அவயங்கள் முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் பத்து பேர் என்றாலும், அது தொடர்பாக முழுமையாக ஆய்வு மேற்கொள்வதற்கு சிறது காலம் ஆகலாம். ஆனால், மீட்பு நடவடிக்கை மற்றும் சேகரிக்க வேண்டிய ஆதாரப்பொருட்கள் தொடர்பான தேடல் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் இருப்பதாக ரசாருடின் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


