Jul 31, 2026
Thisaigal NewsYouTube
SPRM விசாரணையை வரவேற்றார் முகைதீன் யாசின்
தற்போதைய செய்திகள்

SPRM விசாரணையை வரவேற்றார் முகைதீன் யாசின்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 06-

400 கோடி வெள்ளி மதிப்பிலான 1BestariNet திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருப்பதாக கூறி தொடங்கப்படவிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையை முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் வரவேற்றுள்ளார்.

அதேவேளையில் இந்த 1BestariNet திட்டத்தில் ஒரு சல்லிக்காசைக்கூட தாம் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு இந்த திட்டம் குறித்து விசாரணை செய்யப்பட்டது. ஆனால், எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் தாம் சம்பந்தப்படவில்லை என்பதையும் முகைதீன் தெளிவுபடுத்தினார்.

Related News