ஜோகூர், செகாமட், ஜெமென்டா வில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் மாணவனை பிரம்பால் அடித்து கடும் காயம் விளைவித்ததாக பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.5 ஆம் ஆண்டு மாணவன், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி, அந்த மாணவனை தலைமையாசிரியர், பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதாக சம்பந்தப்பட்ட மாணவனின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளதாக செகாமட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்துள்ளார்.
தலைமையாசிரியரின் தாக்குதலுக்கு ஆளாகிய தமது மகனுக்கு கன்னம், கழுத்து, தோள்பட்டை முதலிய பகுதிகளில் பட்டை பட்டையாக காயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பெற்றோர் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அஹ்மத் ஜம்ரி குறிப்பிட்டார்.
இவ்விவகாம் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருதாகவும், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை அல்லது முதல் இரண்டு தண்டனை விதிக்கப்படும் என்று ஓ சி பி டி, அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


