ஜோகூர், செகாமட், ஜெமென்டா வில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றில் மாணவனை பிரம்பால் அடித்து கடும் காயம் விளைவித்ததாக பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.5 ஆம் ஆண்டு மாணவன், வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி, அந்த மாணவனை தலைமையாசிரியர், பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கியதாக சம்பந்தப்பட்ட மாணவனின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளதாக செகாமட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்துள்ளார்.
தலைமையாசிரியரின் தாக்குதலுக்கு ஆளாகிய தமது மகனுக்கு கன்னம், கழுத்து, தோள்பட்டை முதலிய பகுதிகளில் பட்டை பட்டையாக காயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பெற்றோர் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அஹ்மத் ஜம்ரி குறிப்பிட்டார்.
இவ்விவகாம் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருதாகவும், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை அல்லது முதல் இரண்டு தண்டனை விதிக்கப்படும் என்று ஓ சி பி டி, அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


