பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பிகேஆர், ஜசெக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மாநில அரசாங்கம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகத் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஜசெக தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் சிறப்பாகச் செயல்படும் தலைவர்கள் யார் என்பதை மக்கள் தாங்களே மதிப்பீடு செய்து தீர்மானிக்க முடியும் என்றும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் டத்தோஸ்ரீ சுந்தராஜு கூறினார்.
நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை மதிப்பிடுவதில் நாணயத்தின் மதிப்பு முக்கியமான குறிகாட்டியாக விளங்குவதாகச் சுட்டிக்காட்டப்பட்டினார். ஒரு நாட்டின் நாணய மதிப்பு உயர்வதற்கு பல்வேறு காரணிகள் உள்ள நிலையில், அவற்றில் அரசியல் நிலைத்தன்மையும் முக்கியமான காரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அரசியல் மாற்றம் குறித்து முடிவெடுக்கும் போது தற்போதைய சூழ்நிலையையும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மக்கள் கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என மீண்டும் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்தினார்.








