புத்ராஜெயா,ஜன.11
ஓரின சேர்க்கை கொண்டவர் என்று நம்பப்படும் திருநம்பி ஒருவர், தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்தது.
38 வயதுடைய சி. சொம்சிட் என்ற திருநம்பிக்கு எதிரான கொலை குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் விதித்தது.
திருநம்பிக்கு எதிரான கொலை குற்றச்சாட்டு, நோக்கமில்லா குற்றச்சாட்டாக பிராசிகியூஷன் தரப்பு திருத்தம் செய்ததைத் தொடர்ந்து மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.
தன்னுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த தனது காதலியான 29 வயதுடைய சுரியாத்தி மாட் சாட் என்ற 29 வயதுடைய பெண், வேறு ஓர் ஆடவரை திருமணம் செய்து கொள்வதற்கு உடன்பட்டதைத் தொடர்ந்து அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்தப் பெண்ணை, கத்தியால் பல முறை குத்தி கொலை செய்ததாக திரு நம்பிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தாய்லாந்து வம்சாவளியினரை பூர்வீகமாக கொண்ட ஒரு மலேசியரான திருநம்பி, கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி கெடா, சுங்கை பட்டாணி, தாமான் செமாராக்கில் உள்ள ஒரு வீட்டில் புரிந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.








