மலாக்கா, ஜாலான் புக்கிட் கட்டிலில் கட்டுமானத்தில் இருந்த பள்ளத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த வேளையில் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.
இன்று காலை 6.49 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு தம் குழுக்களுடன் விரைந்ததாக தீயணைப்பு மீட்புப்படை தலைவர் முஹமாட் ஹம்டான் சுடின் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 20 வயதிற்கு உட்பட்ட ஆடவன் உயிரிழந்ததாகவும் 21க்கும் 50க்கும் உட்பட்ட இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருந்தனர் என்று முஹமாட் ஹம்டான் கூறினார்.








