ஈப்போ, புக்கிட் க்லெடாங்- கில் மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டு தொலைந்து போன 5 நபர்களின் வழக்கை வனத்துறைக்கு அனுப்பப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
33 முதல் 67 வயதிற்கும் உட்பட்ட அந்நபர்கள் பாதுகாக்கப்பட்டுவரும் வனப்பகுதியில் மலை ஏறுவதை தடைவிதிக்கபட்டிருந்தும் அத்துமீறி நுழைந்து மலை ஏறி தொலைந்து போனதாக புகார் பெறப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7:30 மணியளவில் ஐவரும் வனப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நவம்பர் 1 ஆம் தேதி மழை பருவமாக இருப்பதால் வனப்பகுதி துறை மலை ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்ட ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதனை கருத்தில் கொள்ளாமல் அந்நபர்கள் மலை ஏறியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யஹாயா ஹாஸ்ஸான் விளக்கினார்.








