Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மடக்கு மேஜையில் தலை சிக்கி, 6 வயது சிறுமி பரிதாப மரணம்
தற்போதைய செய்திகள்

மடக்கு மேஜையில் தலை சிக்கி, 6 வயது சிறுமி பரிதாப மரணம்

Share:

நிபோங் தெபால், மார்ச்.22-

வீட்டின் பின்புறம் தனியொரு நபராக விளையாடிக் கொண்டு இருந்த 6 வயது சிறுமி ஒருவர், மடக்கு மேஜையின் இடுக்கில் தலை சிக்கி, பரிதாபமாக மாண்டார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணியளவில் பினாங்கு, நிபோங் தெபால், தாமான் ஶ்ரீ புத்ராவில் அந்த சிறுமியின் வீட்டுப் பகுதியின் பின்புறம் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழும் போது, அந்த சிறுமியின் தாயார், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் வீட்டிற்குள் இருந்ததாக அறியப்படுகிறது.

வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியின் சத்தம் எதுவும் கேட்காத நிலையில் குடும்ப உறுப்பினர்கள் பின்புறம் சென்று பார்த்த போது ,அந்த சிறுமியின் கழுத்து, மடக்கு நாற்காலியின் இரும்புப் பகுதிக்கு இடையில் சிக்கி, அவர் சுயநினைவு இழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் அந்த சிறுமி, பேரா,பாரிட் புந்தார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது அக்குழந்தை இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.

Related News

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு