சரவாக் மாநிலத்தில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி 591 பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது.
இன்று காலை 8.30 மணியளவில் செரியான் பகுதியில் காற்றின் தர குறியீடு 241ஆக பதிவு செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீ அமான், கூச்சிங், சமராஹான், சாரிகே, சிபு, பிந்துலு, கபிட் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
இது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை விடுத்தது
ஆக, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








