இதனிடையே, தொடர்ந்து பேசிய பிரதமர் ஃபெல்டா தொடர்பான சிறப்பு பணிக்குழுவின் விசாரணை நிறைவடைந்ததும், அதன் முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்தவுடன், அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஃபெல்டாவின் முந்தைய நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காண்பதுடன், அதன் நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதும் சிறப்பு பணிக்குழுவின் விசாரணையின் முக்கிய நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, முந்தைய நிர்வாகத்தில் தவறு செய்தவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
சிறப்பு பணிக்குழுவின் விசாரணை தொடர்பான முன்னேற்றம் குறித்து ஏற்கனவே மாமன்னரிடம் விளக்கமளித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.








