Aug 21, 2026
Thisaigal NewsYouTube
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்- பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்- பிரதமர் அன்வார்

Share:

இதனிடையே, தொடர்ந்து பேசிய பிரதமர் ஃபெல்டா தொடர்பான சிறப்பு பணிக்குழுவின் விசாரணை நிறைவடைந்ததும், அதன் முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

விசாரணை அறிக்கை முழுமையாக கிடைத்தவுடன், அதன் முடிவுகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஃபெல்டாவின் முந்தைய நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காண்பதுடன், அதன் நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதும் சிறப்பு பணிக்குழுவின் விசாரணையின் முக்கிய நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முந்தைய நிர்வாகத்தில் தவறு செய்தவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

சிறப்பு பணிக்குழுவின் விசாரணை தொடர்பான முன்னேற்றம் குறித்து ஏற்கனவே மாமன்னரிடம் விளக்கமளித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரம்: இனம், மத அடிப்படையில் நடவடிக்கை இல்லை – பிரதமர் அன்வார்

தாபுங் ஹாஜி விவகாரம்: இனம், மத அடிப்படையில் நடவடிக்கை இல்லை – பிரதமர் அன்வார்

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு

சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்

இஸ்லாம் சமயத்தை  அவமதித்த சிங்கப்பூர் பாதுகாப்பு ஊழியருக்கு 14 நாள் சிறை தண்டனை  விதிக்கப்பட்டது.

இஸ்லாம் சமயத்தை அவமதித்த சிங்கப்பூர் பாதுகாப்பு ஊழியருக்கு 14 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் -  கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்

இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்