Aug 21, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரைச் சேர்ந்த காதலர்களைக் கடத்திச் சென்று கொள்ளையடித்ததாக அறுவர் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினரைக் கடத்தியது, சட்டவிரோதமாகச் சிறைவைத்தது, கொள்ளையடித்தது மற்றும் காயப்படுத்தியது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளூர் ஆடவர்கள் அறுவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

46 வயது எம். பாலமுருகன் , 40 வயது கே. சரவணன், 41 வயது பி. ஸ்ரீ தேவி, 38 வயது ஜி. புகனேஸ்வரன், 38 வயது எஸ். கோபிநாத் மற்றும் 41 வயது எக்ஸ். அட்வின் நிக்கோலஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

நீதிபதி நூர் அசியாட்டி ஜாஃபர் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

ஆகஸ்ட் 8 அன்று மதியம் 2 மணியளவில்ஸ் கூடாய், ஜாலான் ஓர்கிட் உள்ள ஒரு தேவாலயத்திற்கு முன்னால், அல்-ஷமீர் பின் அப்துல் நாசர் என்பவரைக் கடத்தி 20,000 சிங்கப்பூர் டாலர் அதாவது 63,000 ரிங்கிட் பிணைத்தொகை கோரியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

1961-ஆம் ஆண்டு கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 ஆகியவற்றின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன; இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரிங்கிட் பிணைத்தொகையுடனும், இரு பிணையாளர்களின் உத்தரவாதத்துடனும் பிணை வழங்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News

தாபுங் ஹாஜி விவகாரம்: இனம், மத அடிப்படையில் நடவடிக்கை இல்லை – பிரதமர் அன்வார்

தாபுங் ஹாஜி விவகாரம்: இனம், மத அடிப்படையில் நடவடிக்கை இல்லை – பிரதமர் அன்வார்

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு

நாட்டில் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் 56 விழுக்காடு உயர்வு

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்

புத்ராஜெயாவில் தேசிய தினக் கொண்டாட்டம்; ஆயத்த பணிகள் மும்முரம்

இஸ்லாம் சமயத்தை  அவமதித்த சிங்கப்பூர் பாதுகாப்பு ஊழியருக்கு 14 நாள் சிறை தண்டனை  விதிக்கப்பட்டது.

இஸ்லாம் சமயத்தை அவமதித்த சிங்கப்பூர் பாதுகாப்பு ஊழியருக்கு 14 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் -  கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்

இரவு விடுதி ஒன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர்

தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பு

தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பு